ஞாபகமறதி

Posted Wednesday, 3 August 2011 by Sathi


எல்லோரும் என்னை
ஞாபகமறதிக்காரி என்பார்கள் .
அது உண்மைதானடா…
உன்னை பற்றிய ஞாபகங்களைத்தவிர
வேறு எந்த ஞாபகமும் இல்லையே எனக்கு!


காதலனே...

Posted Monday, 1 August 2011 by Sathi

           
        உன்னை என் கருவறையில் 

          உயிர் தரிக்கிறேன்     என் காதலனாக….

                    என் கணவனாக நீ உயிர் பெறுவாய் என்று…

 உன் பிரிவும், செல்லக்கோபமும் 

     குழந்தை பிறக்கும் தருவாயில்

               தாய் அனுபவிக்கும்  வலியான சுகங்கள் போல,

                        எனக்கும் அது சுகமாகத்தான் இருக்கிறதுடா……. 

            நீ கருவிலே சிதைந்து விடாதே….. 

நான் கதறி அழுதிடுவேன்



நண்பர்கள் தினம்

Posted by Sathi
இன்று நண்பர்கள் தினம் எனவே இந்த புனிதமான நாளில்

எனது முதல் கவிதையை

உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்


"கண்களை விட்டுப் பிரிந்து 
செல்லும் கண்ணீர் துளிகளல்ல,
கண்களோடு இருக்கும் கருவிழி 

நட்பு"

பதிவுலகில் புதியவள் நான்

Posted by Sathi

 
மனதோடு எழுபவை எல்லாம் 
சொல்லாய் எழுந்துவிட,
கிறுகிவிட்ட சொற்களெல்லாம்
கவியாய் மாறியதே ............,
அக்கவி தன்னை 
ரசித்திருக்க, பிரசவிக்கிறது,

"கவி ஓவியம்" வலைப்பூ.
புதுமலராய் பூக்கும் எனை  
ஆதரவோடும் நல்வரவோடும்

அணைத்துக்கொள்ளும் என்றெண்ணி 
உங்களில் ஒருவராய்.
கால் பதிக்கிறேன் 

     

    நன்றி
                                             
                                                   அன்புடன் 
                                                 சதி